வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி முதலிடம் பெற்றது.


Coimbatore: முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை கணுவாய் பகுதியில் டர்ஃப் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் கடந்த மாதம் போதை ஒழிப்பு மாதமாகவும், இந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாகவும் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை கணுவாய் அருகே உள்ள எஸ் ஆர் டி டர்ஃப் மைதானத்தில் டர்ஃப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.


தொடக்க ஆட்டத்தை வீ த லீடர்ஸ் தன்னார்வலர் ஜேபி என்கிற ஜெயபிரகாஷ் துவக்கி வைத்தார். மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியை வீ த லீடர்ஸ் பாலாஜி உத்தம ராமசாமி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தும், டாஸ் போட்டும் தொடங்கி வைத்தார்.


இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து 12 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வீரர்கள் எனவும், ஒரு அணிக்கு 8 ஓவர்கள் என ஒதுக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன.


முதலிடத்தை செஞ்சுரியன்ஸ் கிரிக்கெட் அணி பெற்று ₹8,000 ரொக்கப் பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. இரண்டாவது இடத்தை ஆக்டிவ் கிங்ஸ் அணி பெற்று ₹5,000 ரொக்கப்பரிசு, பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றது. குப்பநாயக்கன்பாளையம் கே என் சி சி அணி மூன்றாம் இடத்தையும், வரப்பாளையம் விசிசி கிரிக்கெட் அணி நான்காம் இடத்தையும் பெற்று பரிசுக் கோப்பை மற்றும் மெடல்களைப் பெற்றன.


பரிசளிப்பு விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் பாலாஜி உத்தம ராமசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் மாதமாக கடைபிடிப்பதை முன்னிட்டு, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் துணிப்பைகள் வழங்கப்பட்டன.


முன்னதாக சிறப்பு விருந்தினர் முன்னிலையில் சிறுமி சஹஸ்டிரா ஆதித்யா சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் பரணிதரன் ஜி, ராஜ்குமார் ஜி, தினேஷ் குமார் ஜி, ஜெயக்குமார், பாலகுமார், ஆனந்தகுமார், ஹரி, உதயகுமார், பரணி சவுண்ட் சர்வீஸ் சுப்பிரமணி, தடாகம் கார்த்திகுமார், சுரேஷ்குமார், தேவேந்திரன், சீனிவாசன், கோபிநாத், செந்தில்குமார், குமரன், தம்புராஜ், டி எஸ் ஏ மோகன், ஜெய் கணேஷ், மகேஷ் குமார், அரவிந்த், கமல் நாத், விகாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ் ஆர் டி டர்ஃப் நிறுவனர் ஹேமந்த் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...