ஆசிய அளவில் யோகாவில் இரு தங்கப் பதக்கம் வென்ற பார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி

பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி தாய்லாந்தில் ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் இரு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்ததற்கு கோவையில் உள்ள கேரளா கிளப்-யில் பாராட்டு விழா நடைபெற்றது.

தாய்லாந்தில் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.



இதில், இந்தியாவில் இருந்து 15 மாணவர்கள் ஜூனியர் நிலையில் கலந்து கொண்டு தங்களது யோகா திறமையினை வெளிப்படுத்தினர். இதில், பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒட்டுமொத்த முதல் பரிசாக சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

மாணவி வைஷ்ணவி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், தேசிய, மாவட்ட அளவில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.



இவருக்கு "யோகா ராணி", "யோகா நட்சத்திரா" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர "இளம் சாதனையாளர் விருது", "யோகா கலைமாமணி" விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இவரது யோகா செயல்திறன் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் 26ம் தேதியன்று நடைபெற்ற 3-வது காண்வெல்த் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவர், 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்களை செய்து ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

மாணவி வைஷ்ணவி, இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், இவரது இலக்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதாக கூறினார். மேலும், இவரது வெற்றிக்கு பள்ளியில் அளிக்கப்பட்ட தனித்துவமான முக்கியத்துவமே காரணம் என்றும், பார்க் குளோபல் பள்ளி என்றுமே மறைந்திருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர தவறியதில்லை எனவும் கூறினார்.



மேலும், தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, இவருக்கு இலவச கல்வி, ஜிம்னாஷ்டிக் பயிற்சிக்கு உதவி அளிப்பதாகவும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிவருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பார்க் குளோபல் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி வைஷ்ணவியை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ அறிவுறுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...