கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வலியுறுத்தியும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நடைப்பயணம் இன்று முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கோவை: 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் வியாழக்கிழமை கோவையில் தொடங்கியது.

கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலப் பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் மக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், மத்திய அரசு அவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்துவதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.



அதன்படி, கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கியுள்ள இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நடைப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்ட உள்ளதாக எம். ஆறுமுகம் தெரிவித்தார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...