கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற அமைதிப் பேரணி நடந்தது. திமுக மாவட்டக் கழக செயலாளர் அ.ரவி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Coimbatore: தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் Dr கலைஞர் மு. கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் துடியலூரில் அமைதிப் பேரணி மற்றும் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.




கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் மலர் அஞ்சலி மற்றும் அமைதிப் பேரணி நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதி, மேட்டுப்பாளையம் தொகுதி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் மலர் அஞ்சலி மற்றும் அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.






கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூரில் நடைபெற்ற மலர் அஞ்சலி மற்றும் அமைதிப் பேரணிக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக மாவட்டக் கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி பி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




முதலில் துடியலூர் திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து துடியலூர் திமுக அலுவலகத்திலிருந்து துடியலூர் பேருந்து நிறுத்தம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.




இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர்கள் அருள்குமார், இராஜசேகரன், மதியழகன், பொன்னுசாமி, சிரவை சிவா, கதிர்வேல், விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர்கள் கார்த்திக், சி எம் கே குமார், தாமு மற்றும் அணி நிர்வாகிகள் தியாகு, மாலதி, ரங்கநாயகி, சந்திரன், ராக்கிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.




பேருந்து நிறுத்தத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.




நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துடியலூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் இராஜசேகரன் செய்திருந்தார். இந்நிகழ்வில் திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியினரும் அமைதியாக பேரணி நடத்தி, தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தங்களின் மரியாதையைச் செலுত்தினர்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...