தமிழகத்தில் 14 புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி கோரி மத்திய அமைச்சரிடம் மாநில அமைச்சர் மனு

தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுதில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் தமிழ்நாட்டில் 14 புதிய பேருந்து நிலையங்கள் அமைத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டி கோரிக்கை மனுவினை அளித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகின்றது. தொழில் வளர்ச்சி காரணமாக நகர்மயமாகுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதனால், கிராமப்புறத்தில் இருந்து நகரங்களில் குடியேறுவதும் மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 18 சிறப்பு நிலை நகராட்சிகள், 28 தேர்வுநிலை நகராட்சிகள், 34 முதல்நிலை நகராட்சிகள் மற்றும் 44 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 124 நகராட்சிகள் உள்ளன. நகரமயமாகுதல் காரணமாக ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் ஒரு பேருந்து நிலையமாவது இருப்பது அவசியமாகும். மொத்தமுள்ள 124 நகராட்சிகளில் 112 நகராட்சிகளில் பேருந்து நிலைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலம், தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியில் ரூ.202.80 கோடி உள்ளிட்டு திருச்சி, மதுரை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சாவூர் என மொத்தம் 7 மாநகராட்சிகளில் ரூ.545.04 கோடி மதிப்பீட்டிலும் மயிலாடுதுறை, திண்டிவனம், கரூர் உள்ளிட்டு 7 நகராட்சிகளில் 191.60 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் ஏற்படுத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் மானியமாக வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் அளித்தார்.

இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் பி.வேணுகோபால், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுரை ஆணையர் என்.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...