கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தேசியக் கொடியேற்றி, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திரதின பேருரை வழங்கினார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா 15.08.2026 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தலைமையேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, NCC மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.






துணைவேந்தர் முனைவர் சு. இரவி சுதந்திர தின விழாப் பேருரை வழங்கினார். அவர் தனது உரையில், "இந்திய இளைஞர்களின் உழைப்பும், பொறுப்புணர்வும் உலக அரங்கில் உயர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இதற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்றும் மறவாமல் போற்றப்பட வேண்டும். அதன் வெளிப்பாடாக, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க இளைஞர்கள் உறுதி கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




கற்பகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயலர் க. முருகையா, பதிவாளர் முனைவர் பீ. வீ. பிரதீப், தேர்வாணையர் முனைவர் ப. பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், NCC, NSS மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்புக்காகப் பாராட்டுப் பெற்றனர். முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் விழாவில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...