சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைகளை தூர்வாருதல், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்துதல், வனவிலங்குகளால் பயிர் சேதத்தைத் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மனுக்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும், குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டிபுதூர் RVC நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கஸ்தூரி நாயக்கன்பாளையம் KNL ஓ துரைசாமி கருத்துரை வழங்கினார். சோமையனூர் ஆசிரியர் மாணிக்கம், சுந்தர்ராஜன், சோமசுந்தரம், காளையனூர் மனோகரன், வரப்பாளையம் ஜீவானந்தம், 24 வீரபாண்டிபுதூர் பவர் ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் வேணுகோபால், சின்னதடாகம், தடாகம், 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழைநீரை சேமித்து பயன்படுத்துவதற்கான நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக அவர் கூறினார். மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில் கிராமங்களில் உள்ள மழைநீர் சேமிப்பு குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பவானிசாகர், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியப் பகுதிகளை இணைத்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மழைக்காலங்களில் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் செல்லும் உபரி நீரை பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். வனப்பகுதிகளில் தேவையான குடிநீர் தொட்டிகளை அமைத்து, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், கேரளாவில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகளைப் போன்று விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க உரிய அனுமதிகள் வழங்க வேண்டும் என்றும் வேணுகோபால் தெரிவித்தார். வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சட்டசபை முற்றுகைப் போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கண்ணபிரான், பெருமாள் சாமி, துரைசாமி, சுப்பையன், சந்திரன், கார்த்தி, ராஜன், நேருராஜ், ஜெயா, ராம் லட்சுமணன், செல்வராஜ், கனகசுந்தரம், குமணன், வீராசாமி, பாரதி செல்வம் உள்ளிட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...