கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை நவக்கரையில் அமைந்துள்ళ ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "தெய்தகா" என்ற கருப்பொருளில் ஓணம் கொண்டாட்டம் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆகஸ்ட் 20-ம் தேதி சிறப்பாக நடத்தப்பட்டது.



"போதைப்பொருளுக்கு 'இல்லை' என்று சொல்லுங்கள்; ஓணம் சத்யாவுக்கு 'ஆம்' என்று சொல்லுங்கள்" என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பதாகையை மகாபலி மன்னன் வெளியிட, ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறுவனர் Dr அஜித்குமார் லால் மோகன் பெற்றுக்கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.



மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தினர். பஞ்ச வாத்தியம், செண்ட மேளம், சிங்காரி மேளம், தம்போலம், நாசிக் டோல், ஜமாப், பாண்டி மேளம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளுடன் மகாபலி மன்னனை முன்னிலைப்படுத்தி நவக்கரையிலிருந்து கல்லூரி வளாகம் வரை பேரணி சிறப்பாக நடைபெற்றது.



மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் 40 கிலோ பூக்களால் மாணவர்கள் அமைத்த பிரமாண்ட பூக்கோலம் கல்லூரி வளாகத்தை அலங்கரித்தது. ஓணம் விழாவின் ஒரு பகுதியாக பூக்கோலம், கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன. திருவாதிரை நடனம் உள்ளிட்ட கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களால் அழகாக நிகழ்த்தப்பட்டன.

அடப்பிரதமன், முக்கனி பாயாசம், சேமியா பாயாசம், நாவல் பழ பாயாசம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாயாசங்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பூக்காவடி மற்றும் கதகளி நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. மாணவிகள் கேரள பாரம்பரிய கசவு ஆடைகளை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பம்சமாக 25 வகையான உணவுப்பொருட்களுடன் ஓணம் சத்யா தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த சத்யாவை மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.



விழாவில் பேசிய Dr அஜித்குமார் லால் மோகன், ஓணம் பண்டிகையின் அடிப்படையான ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுடன் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வும் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என வாழ்த்தினார். இளைஞர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விழா மாணவர்களிடையே கேரள பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதோடு, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...