மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தப்ருக் நிகழ்வு 11வது ஆண்டாக நடைபெற்றது.


Coimbatore: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் அமைப்பு சார்பில் 20,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச நெய் சோறு வழங்கப்பட்டது. சுமார் 2000 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட நெய் சோறு தப்ருக் நிகழ்வாக வழங்கப்பட்டது.






இஸ்லாமிய இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகையன்று, நபிகளின் புகழையும் ஈகை பண்பையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏழை எளிய மக்களின் பசியாற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாக கருதப்படுகிறது.






அதன்படி, கோவையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தப்ருக் எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உக்கடம் ஜி.எம் நகரில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது.




இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து உணவு பெற்றுச் சென்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில், இது 11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




மிலாடி நபி பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளியோருக்கு உணவு, உடை மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. நபிகளின் போதனைகளையும், நற்பண்புகளையும் பின்பற்றும் வகையில் இத்தகைய தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...