கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



உப்பிலிபாளையம் முதல் கே.எம்.சி.ஹெச் வரையிலான பகுதியில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் இரு புறங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தற்போது நிழற்குடை இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலம் மற்றும் கோடைக்காலங்களில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிறுத்தங்களில் புதிதாக நிழற்குடை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பழுதடைந்துள்ள நிழற்குடைகளை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பேருந்து நிறுத்தங்களின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தார். புதிய நிழற்குடை அமைக்க வேண்டிய இடங்கள் மற்றும் பழுதடைந்த நிழற்குடைகளை புனரமைக்க வேண்டிய இடங்களை அடையாளம் கண்டார்.

இந்த ஆய்வின் போது, கோவை மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் கணேசன், தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் ஜெகதீசன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜெகன், தேவதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார் (பொ), இளங்கோவன் (பொ), போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

இந்த முயற்சி பொது போக்குவரத்து பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...