சையானுக்கு தற்போது அறுவை சிகிச்சை தேவையில்லை- கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரங்கநாதன் பேட்டி


நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ரங்கநாதன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சயானுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு, குடல் மற்றும் உடல் நோய் தொடர்பான சிகிச்சைகள் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்கள் சரியாகி வருகிறது. இங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சயானுக்கு தற்போது எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. உரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...