கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் 20 கிணறுகளில் முதல்கட்டமாக மீன்கள் விடப்பட்டன. 1200 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொசுப்புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்களை கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் விடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியா மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி தலைமையில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வார்டு வாரியாக கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 20 வார்டுகளில் இன்று (01.09.2026) கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டன. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில் இப்பணியை மேற்கொண்டனர்.



மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் கல்வீரம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண் மீன் சிறியதாகவும், பெண் மீன் பெரியதாகவும் இருக்கும். ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன் என்ற விகிதத்தில் விடப்படுகிறது.

வளர்ந்த ஒரு கம்பூசியா மீன் ஒரு நாளில் 100 முதல் 300 கொசுப்புழுக்களை உண்ணும் திறன் கொண்டது. இம்மீனின் வாழ்நாள் ஒரு ஆண்டு. மீன் விடப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆயில் போன்றவற்றை தெளிக்கக்கூடாது என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 33 இடங்களில் நடக்கும் முகாம்களில், காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்டறியப்பட்டால் அப்பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 10,000 கம்பூசியா மீன்கள் விடப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 60 சுகாதார ஆய்வாளர்கள், 5 மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் 21 துப்புரவு ஆய்வாளர்கள் அடங்கிய தனிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...