பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றச்சாட்டு


நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.



முத்தலாக் விவகாரம் தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் பெண்கள் அணி பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக குற்றம்சாட்டினார்கள். 

மேலும், கற்பழிப்புகளுக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் கொண்டு வராத பாஜக அரசு, முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதேன் என கேள்வி எழுப்பினர்.

சிலர் தவறாக தலாக் முறையினை பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த சட்டத்தையும் தவறாக பாஜக சித்தரித்து பிரச்சனையாக்குவதாகவும், இது முழுக்க அரசியல் சதித்திட்டம் எனவும் கூறிய அவர்கள், இஸ்லாமிய பெண்களை பாதுகாக்க வேண்டிய எண்ணம் பாஜக-விற்கு கிடையாது என தெரிவித்தனர். மேலும், பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதகமானது எனவும் அவர்கள் கூறினர்.

இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வருகின்ற மே 20 ஆம் தேதி பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...