நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது தவறான விசயம்- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது என்பது தவறான விசயம் எனவும், சமச்சீர் கல்வியை மேம்படுத்த அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:-

நீட் மற்றும்  இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையின் உத்திரவுபடி வந்துள்ளேன். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடு, நிறுவனங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. 

தமிழகத்தில் நடைபெறும் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடிய அரசாக தற்போதைய தமிழக அரசு இருக்கின்றது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழகத்திற்கு விரோதமான, மக்கள் ஏற்றுக்கொள்ளாத விசயங்களை கூட மாநில அரசு ஏற்றுக்கொள்கின்றது. 

தன்னை காப்பாற்றிக்கொள்ளும் ஆர்வம் மக்களை காப்பாற்றுவதில் மாநில அரசுக்கு இல்லை. தமிழக மருத்துவர்களை தரம்குறைந்த மருத்துவர்களாக யாரும் பார்ப்பதில்லை. நீட் தேர்வினால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வி கொடுக்கமுடியும் என்பது தவறான வாதம். நீட் தேர்வை எதிர் நோக்கி  கல்விமுறையை மாற்றுவது  என்பது தவறான விசயம். 

ஆண்டுதோறும் சமச்சீர்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும், கல்வியின் தரம் பரீசிலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கவில்லை'' என அவர் பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...