வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர். விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் சமூக நீதிப் போராட்ட வீரருமான இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தியாகிக்கு மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் இந்த சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

விழாவில் அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி DMK உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், AIADMK நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், MDMK ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இமானுவேல் சேகரனார் சமூக நீதிக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். அவரது தியாகத்தையும் தொண்டாற்றலையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வால்பாறையில் குருபூஜை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69-வது குருபூஜை விழாவும் அனைத்துக் கட்சியினரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் இந்த சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
விழாவில் அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி DMK உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், AIADMK நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், MDMK ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இமானுவேல் சேகரனார் சமூக நீதிக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். அவரது தியாகத்தையும் தொண்டாற்றலையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வால்பாறையில் குருபூஜை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69-வது குருபூஜை விழாவும் அனைத்துக் கட்சியினரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.