விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைக் கல் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 40 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோவை முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மயில் தோகை போன்ற சிறப்பு மாலையுடன் பக்தர்களை வரவேற்றார்.

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல்லால் ஆன சிலையாகும். 190 டன் எடை கொண்ட இந்த சிலையின் உயரம் 19 அடியும், அகலம் 10 அடியும் கொண்டது. இந்த சிறப்பு மிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன காப்பில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் பல்வேறு இனிப்புகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் தொடர்ச்சியாக கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் எந்த சிரமங்களும் இன்றி தரிசனம் செய்வதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்புகள் அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, பக்தர்கள் வரிசையாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் மட்டுமின்றி, கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வருகை தந்து விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று வருகின்றனர்.
புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல்லால் ஆன சிலையாகும். 190 டன் எடை கொண்ட இந்த சிலையின் உயரம் 19 அடியும், அகலம் 10 அடியும் கொண்டது. இந்த சிறப்பு மிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன காப்பில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் பல்வேறு இனிப்புகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்கள் தொடர்ச்சியாக கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் எந்த சிரமங்களும் இன்றி தரிசனம் செய்வதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்புகள் அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, பக்தர்கள் வரிசையாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் மட்டுமின்றி, கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் உட்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வருகை தந்து விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று வருகின்றனர்.