10-ஆம் வகுப்பில் 96.42 சதவிகிதம் பேர் கோவையில் தேர்ச்சி


கோவையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 519 பள்ளிகளில் இருந்து 41,649 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில், 40,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 20511 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 21138 பேர் தேர்வெழுதியதில் 20709 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவிகிதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டு 95.65 சதவிகிதமாக இருந்தது. 2016-யில் 96.22 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த தேர்ச்சி விகிதம் 0.2 சதவிகிதம் அதிகமாகும். மேலும், 238 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

44 சிறைக் கைதிகள் தேர்ச்சி

கோவை மத்திய சிறை கைதிகள் 49 பேர் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...