பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணி காரணமாக இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (மே 19) மேற்கொள்ளப்பட்டு வருவதால் இக்குடிநீர் திட்டத்தில் இயங்கும் 4 பிரதான மின் மோட்டார்களில் 3 பிரதான மின் மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, 14 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் ஒரு நாள் குடிநிர் விநியோகம் நிறுத்தப்படும்.

பணிகள் முடிக்கப்பட்டு இன்று நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நிராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை, பில்லூர் பராமரிப்புக் கோட்டம் நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...