தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர உரிமையுண்டு என தெரிவித்தார். அரசியலில் பெரியார் பாதையை பின்பற்றுவேன் என கூறிய ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தை தவறான பாதையில் நடத்திய சென்றவர் ஈவெரா என பதிலளித்தார். தமிழகத்தில் பெரியார் பாதை என்பது இந்து விரோத பாதை என கூறிய அவர், அந்த பாதையை ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் ஏற்று கொள்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும் கூறிய அவர், பாஜக தமிழக அரசியல் சூழலை பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டுபவர்கள் அரசியல் அரிசுவடி தெரியாதவர்கள் என தெரிவித்தார். பாஜகவினர் ஒன்றும் சந்நாசிகள் அல்ல எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். ஜானகி, ஜெயலலிதா சண்டையை பயன்படுத்து திமுக ஆட்சிக்கு வந்தது தவறில்லை என்றால், இதுவும் தவறு இல்லை என அவர் தெரிவித்தார். இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இந்தி படிக்கக்கூடாது என தமிழக மக்களை கிணற்று தவளைகளாக்க திமுக முயற்சிக்கிறது எனவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழிக்கு பாஜக பற்றி பேச அருகதை கிடையாது எனவும், பாஜக நிறுத்தும் வேட்பாளர் தான் குடியரசு தலைவராக முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

திகார் சிறையில் உள்ள அதிமுக துணைபொதுச்செயலாளர் தினகரனுக்கு கம்பெனி கொடுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...