கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபாட்டில்களை உடைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

கோவை கணபதிபுதூர் அடுத்துள்ள சங்கனூர் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததையடத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக மதுவை பதுக்கிவைத்து அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸாரிடம் அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஏற்கனவே பல முறை புகார்கள் அளித்திருந்தனர். ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.



இந்நிலையில், மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் நேற்று (மே 20) கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வந்ததை அறிந்து அங்கு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை சாலையில் வீசி எறிந்தனர். இதனிடையே, மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து மதுபாட்டில்களையும் வாலிபர் சங்கத்தினர் உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதது.

இதேபோல், கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை மறித்த போலீஸார் 15 நாட்களுக்குள் மதுக்கடை அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...