"நாளை சுவாசிக்க காற்று வேண்டுமெனில் இன்றே மரம் நடுவீர்''- ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்ட செல்வகுமார்

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களிடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தனி மனிதராக காங்கேயத்தைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவர், உடல் முழுவதும் மரக்கன்றுகளை சுமந்து வந்து மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டார்.



இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், திரும்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் வசித்து வருகிறேன். திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 7 வருடங்களாக மரம் வளர்ப்பு குறித்து தனி மனிதனாக மக்களிடைய விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். 

இதற்காக பிரத்யேகமாக ஆடை தைத்து அதில் 70 மரக் கன்றுகளை வைத்துள்ளேன். இது அனைத்தும் சேர்த்து 100 முதல் 120 கிலோ எடை வரை இந்த ஆடை இருக்கும். இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களைக் கடந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த 70 மரக்கன்றுகள் வைத்துள்ளேன்.

மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம் மரங்களை வெட்டியதே. தற்போது மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் மரக்கன்றுகளை நடவுசெய்தால் மட்டுமே மழை பெய்யும். 

தமிழ்நாடு முழுவதும், அரசு விடுமுறை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன். மேலும், இலவசமாக மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறேன். 

நம் எதிர்கால சந்ததியினர் சுவாசிக்க நாம் தற்போதே மரம் நட வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துணியால் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்துமாறும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன். கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்டு 32 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

அழிந்து வரும் பனைமரங்களை காப்பாற்ற ஆறு, குளம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பனைமர விதைகளை நடவு செய்து வருகிறேன். விவசாயிகளுக்கும் சொந்த செலவில் பனை விதை வாங்கி விநியோகித்து வருகிறேன்.

மழை பெய்ய கோவில்களில் சிறப்புப் பூஜைகளையும், யாகங்களையும் நடத்துவதைத் தவிர்த்து மரம் நட அரசும், மக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...