விவசாய நிலத்தில் கழிவுகளை சேர்க்கும் தனியார் நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய நிலங்களில் விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...