மழைவேண்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் இன்று (மே 22) மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழைபொழிவின்றி நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையங்கள்துறை சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறையின்படி, மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களில் மழைவேண்டி யாகம் நடத்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நந்தியை கழுத்தழவு தண்ணீரில் மூழ்கச்செய்தும், மழைவேண்டி கோவில் குருக்களால் தேவாரங்கள் மூலம் சிவனை வேண்டியும், கஜபூஜை நடத்தியும், தீர்த்த தண்ணீர்களை தெப்பக்குளத்தில் பூஜித்து ஊற்றியும் வருண பகவானை வேண்டினர்.



அதுபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களான அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோவில் தேக்கம்பட்டி, அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவில் அன்னூர் வட்டம், அருள்மிகு இராமலிங்கசாமி திருக்கோவில் இடுகம்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம், அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் கோட்டை கோவை நகர்வட்டம், அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், உப்பாரவீதி கோவை நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பனர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, உள்ளிட்டோரும், சமூக ஆர்வளர்களும், பொதுமக்களுமென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...