சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் வாயில் கருப்பு தூணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர். 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.

இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...