அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.

குடியரசு தலைவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி போன்ற மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. 

நேற்று எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை சந்தித்து தொகுதி கோரிக்கைகளை தெரிவிக்கவே வந்தனர். எம்.ஏல்.ஏ கூட்டத்தை கூட்டச்சொன்னது குறித்து தனக்கு தெரியாது" என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தடம் புரள்வதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, இரண்டு அணியும் ஒன்றாக சேரவேண்டும் என்பதே தனது கருத்து' என்றார்.

மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தெரிவித்தார். பத்திரிகையில் எதாவது செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...