சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட மதுபானக்கடை, சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். 

இதனால் இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைத்தது.

இந்நிலையில் புதிதாக விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தில் போது, விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த டாஸ்மாக் கடையினை மூட நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடை முன்பாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த மறியல் போராட்டம் காரணமாக சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...