நகர்ப்பகுதியை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல, சிஎம்சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் தயக்கம்

சி.எம்.சி., காலனிக்கு பின்புறம், சிட்டி மாநகராட்சி பள்ளிக்கான மைதானம் உள்ளது. அதன் ஓரத்தை ஆக்கிரமித்து, 400 குடும்பங்கள் ஓட்டு வீடு அமைத்து, குடியிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். இப்பகுதிக்கு பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. உப்புத்தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், வீட்டுக்கு முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. மின் வசதி இல்லாததால், அருகில் உள்ள சி.எம்.சி., காலனியில் தற்காலிக இணைப்பு பெற்று, தற்போது பயன்படுத்துகின்றனர். 



இப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனை சந்தித்து, 'மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்' எனக்கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு ரூபாய் 377 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்; 'சி.எம்.சி., காலனி மைதானத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். போதிய அடிப்படை வசதியில்லை. காலனியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறோம். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் கல்வி பாதிக்கிறது. புதிதாக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும்' என மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை' என்றும் மாறாக, வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இடம் பெயருமாறும் கூறினார். 

இங்கு வசிக்கும் பெரும்பாலனோர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை 5 மணியளவில் பணிக்கு செல்லவேண்டும். இதனால் வெள்ளலூர் பகுதியில் இருந்து வர பேருந்து வசதி கிடையாது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இங்கு உள்ளவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். எனவே கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களுக்கு சிஎம்சி காலனி மைதானத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டவும், சி.எம்.சி., காலனி குடியிருப்பை செப்பனிட மதிப்பீடு தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை. நகர்ப்பகுதியை விட்டு, அங்கு இடம் பெயர்ந்து செல்ல, துப்புரவு தொழிலாளர்கள் தயங்குகின்றனர், என்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...