நீலகிரியில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...