பைக்ரேஸ் வீரர்களுக்கு சுசுகியுடன் இணைந்து ஜே.கே. டயர் வழங்கும் புதிய வாய்ப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த பைக்ரேஸ் வீர்ர்களை இருபது ஆண்டுகளாக இனங்கண்டு ஊக்கமூட்டி வருகிறது ஜே.கே. டயர் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இது நம்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பைக்ரேஸ் வீரர்களை உருவாக்கி உரமேற்றும் புதியபணி.



இந்திய மோட்டார் பந்தயக்களத்தில் புதுமைகளைப் புகுத்திய ஜே.கே.டயர், உலகின் முன்னணி நிறுவனமான சுசுகியுடன் கைகோர்க்கிற இந்த நிகழ்வு, இந்திய பைக்ரேஸ் களத்தில் தனித்துவமான தேசிய பைக்ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக அமையும். கடந்த 20 ஆண்டுகளில் எட்டமுடியாத இலக்கை இது எட்டியுள்ளது. 

இந்த போட்டிகள் பைக்ரேஸில் ஆர்வத்துடன் இந்தியாவின் மூலைமுடுக்கிலும் முயன்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பளித்து, அவர்களின் சாம்பியன் கனவை மெய்யாக்கும். 

ஏரத்தாள சர்வதேச பைக்பந்தய வீர்ர்களுக்கான வாய்ப்புகளையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் இப்பொழுதிருந்து நாங்கள் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம் என்கிறார் ஜே.கே.டயர்ஸ் மோட்டார்ஸ் போர்ட் தலைமை நிர்வாகி சஞ்சய்சர்மா. 

இருசக்கர மோட்டார் வாகன உலகில் தடம்பதித்த ஜே.கே.டயர்ஸ், மேலும் முன்னேறி பைக்ரேஸ் சாம்பியன்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

பார்முலா ஒன் வீர்ர்களான நரேன்கார்த்திகேயன், கருண்சண்டாக், மற்றும் புதிய பாணியிலான வீரர் அர்ஜூன்மைனி ஆகியோர் ஜே.கே.மோட்டார் ஸ்போர்ட் ஆதரவால் உயர்ந்தவர்கள்.

ஜே.கே.டயர்ஸ் வழங்கும் சுசுகிஜிஜ்ஜர்கப் 2017 சாம்பியன்ஷிப் போட்டிகள் இருபிரிவுகளாக நடைபெறும். 12 வயதிலிருந்து 16 வயதுடையோருக்கானது ஒருபிரிவாகவும், மற்றொன்று 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியாக அமையும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...