போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை உடனடியாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் - சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புளூ ஹில்ஸ் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் தலைமையில் மாநிலக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.



இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...