கோவையில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து


கோவை இராமநாதபுரம் பகுதியில் ஜெம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இங்கு அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வந்து செல்வர். 

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்-யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த மருத்துவ கழிவுகள் மீது தீ பட்டு மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் அந்த தீ அறையில் இருந்த குளிர்சாதன கருவியும் (ஏ.சி) தீப்பிடித்து எரிந்தது. 

இதையடுத்து ஊழியர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மருத்துவமனை முழுவதும் வேகமாக பரவியது.



இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றினர். பின்னர் அவசர சிசிக்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளை மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரத்தில் பிரபலமான ஜெம் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மருத்துவமனையில் தீ பற்றியவுடன் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...