கோவை வெள்ளலூர் பகுதியில் நுழைந்த யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது- முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டம்

கோவை மாவட்டம், மதுக்கரை, வெள்ளலூர் பகுதியில் நான்கு பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் இந்த ஒற்றை யானை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனிடையே, நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் நுழைந்த அந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கியது. தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்த யானை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் உள்ளிட்டு ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டனர். மேலும, இந்த காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் மற்றும், மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் உள்ளிட்ட மூவரும் சுமார் 12.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி பிடித்தனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை முகாமுக்குக் கொண்டு செல்ல வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிதளவு மயக்கம் தெளிந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...