ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



மத்திய அரசு ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது, பன்மடங்கு வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டு வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் செயலாகவே அமைகிறது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறு தொழில் வணிக நிறுவனங்களை பாதிக்காதவாறு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தியும், மாணவர்களை பாதிக்கும் போதை தரும் மாத்திரை, பெண்களின் சிசு கருச்சிதைவு போன்ற மருந்துக்களை தடைசெய்யக் கோரியும், உயிர்காக்கும் மருந்துக்களை குறைந்த விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவும், மத்திய மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் சுங்கவரியை குறைக்கவும், கோவை திருப்பூர் மையமாக செயல்படும் கணியூர் சுங்கசாவடியில் இருந்து 30 கிலோமீட்டர் வரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட பொருளாளர் பொன்.தங்கமரியப்பன் மற்றும் வணிகர் நலமுன்னேற்ற சங்கம், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...