உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை இணைப்பது என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...