டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பள்ளி சீருடையுடன் மாணவர்கள் போராட்டம்


கோவை ராஜாவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராஜாவீதி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் வந்த மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடை முன்பாக இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகே செயல்படும் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி திறக்கும் முன்பாக அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுபானக் கடையினால் மாணவர்களுக்கு குடிபழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதுகுடிப்பவர்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...