கல்குவாரியால் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமம் பெரியகோட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியால் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...