விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வண்டல் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாரி வண்டல் மண் வழங்கும் பணி குறித்து வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள் மற்றும் 246 குளங்களில் தூர்வாரும் மற்றும் இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் 4000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.



வட்டாட்சியர் அலுவகத்தில் விவசாயிகள் சிட்டாவுடன் விண்ணப்பித்து, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வண்டல் மண் எடுக்க உத்தரவு வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் மண்ணும், புஞ்சை நிலம் 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவிற்கும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர், அல்லது 10 டிராக்கடர் லோடு மண்ணும், மண்பாண்டங்கள் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு குளங்கள் தூர்வாருவதன் மூலம் குளங்களை ஆலப்படுத்துவது மட்டுமல்லாமல் விவசாயிகளின் விலைநிலங்களுக்கு பயன்படுத்துவதற்கான உரமண்ணும் விலையில்லாமல் கிடைக்கிறது. மேலும், மழைக்காலங்களில் போதிய அளவு நீர் தேக்கிக்கொள்ள முடியும். இதன்மூலம் எதிர்க்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாய பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

கோவை மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சந்திர சேகர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலாகள், பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...