மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல்

கார்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக பர்மிட் வழங்கும் ஆர்டிஓ நிர்வாகத்தை கண்டித்தும், மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தியும் கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்பரேட் ஆட்டோக்கள் மற்றும் ஓலா, உபர் போன்ற வாகனங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் ஆர்டிஓ நிர்வாகம் பர்மிட்டுகளை வழங்கி வருவதாகவும், மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்காத நிலையில் தாங்களாகவே நிர்ணயித்து கோவையில் இயக்கி வருவதாகவும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலை போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும், புதிய புதிய உத்தரவுளை பிறப்பித்து ஆட்டோ தொழிலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் மத்திய அரசை கண்டித்தும்  கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் மணிக் கூண்டு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி எப்சி செய்யாத வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிப்பதை நிறுத்தக் கோரியும், மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...