ஆவாரம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகள், கோவில்கள் நிறைந்த இப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்கடையினை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளத நிலையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்கள் நடைபெறவும் காரணமாக இருப்பதாகவும், இங்குள்ள பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையினை அகற்ற அரசிற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...