மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் குறிவைத்து தாக்கபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாடுகளை பாதுகாப்பதாக மத்திய அரசு வேஷம் போடுகிறது. தமிழ்நாட்டின் அடிப்படை மாநில உரிமை பரிக்கப்படுகிறது. மாநில உரிமைகளை காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவர்பின் வந்தவர்களுக்கு துணிச்சல் உண்டா என தெரியவில்லை. தமிழகத்தை ஆளுகிற இடத்தில் ஆள் இருக்கிறது போல் தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனிப் பெருமை உள்ளது. வைர விழா நடத்துவதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாவடக்கத்துடன், கருணாநிதி-யின் சாதனைகளை ஒப்புகொள்ள வேண்டும். தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டிற்குள் பாரதீய ஜனதா கட்சி கால் அடி எடுத்து வைக்காமல் தடுக்கும் கட்சிக்கு, அரசியலில் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...