கோவையில் மழை நீருடன் கலந்து கழிவு நீரும் சாலையில் ஓடியதால் மக்கள் அவதி

கோவையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையுடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர். 



தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...