மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை!

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதியன்று (நாளை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வைகோவுக்கு விசா வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழனன்று (நேற்று) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தினை அவர்கள் அடைந்தனர். இந்நிலையில், வைகோ-வை சோதனையிட்ட மலேசிய குடிவரவு அதிகாரிகள், வைகோ மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயர் அதிகாரிகளை வைகோ சந்தித்த நிலையில், இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். வைகோவின் பாஸ்போட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மற்றும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் ஆகியோர் முயற்சித்தும் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. 

இதனிடையே, இன்று இரவு 10.45 மணிக்கு மலேசியாவில் இருந்து சென்னை வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் வைகோ-வை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...