அதிமுக பல அணிகலாக பிரிந்ததற்கு பாஜக காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல எனவும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இது வரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளே விவசாயம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் வழக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தக்க நேரத்தில் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது" என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

முதலில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மாலையில் கோவையில் நடைபெறும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...