ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியர்களுக்கான 21 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 மாணவியர் விடுதிகளும், 3 கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும், ஐடிஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என 39 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்களை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியிலும் சேர தகுதி உடையவர். இவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து நிலையத்தில் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும், பாய், போர்வை, கட்டில் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

2017- 2018 ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் வரும் ஜூலை 12ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 27ம் தேதிக்குள்ளும் காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் விபரங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகளின் விளம்பர பலகையில் வெளியிடப்படும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...