3 ஆண்டுகளுக்கான நலத்திட்டங்களின் வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் - அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேட்டி

3 ஆண்டுகளுக்கு தேவையான நலத்திட்டங்களுக்கான வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பிலான மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறையினரிடையே உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஆட்சி காலத்தில் 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல்கள் புரையோடிப்போயிருந்ததாக குற்றம்சாட்டிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். மத்தியில் திறைமையான தலைவர், நிலையான ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் மத்திய அரசின் பல்துறை சாதனைகளையும் பட்டியலிட்டார். 



மத்தியபிரதேசத்தில் உற்பத்தி அதிகரித்துள்ள போதும் தேவை குறைந்துள்ளதே விவசாயிகளின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார். வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் முக்கிய இலக்கு எனக்கூறிய அவர் புதிய இந்தியாவை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். 

அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்கள் கூடுதலாக விமான சேவை மூலம் இணைக்கப்படும் என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூடுதலாக பலர் வருமான வரி செலுத்த முன்வந்துள்ளதால் தற்போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...