கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி அதிகாரிகள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பழைய அலுவலகத்திற்கு வெளியே வாடகைக்கு இருந்த அரசு அலுவலகங்கள் தற்போது புதிய கட்டிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. 

மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...