ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணியினை வீணடித்த கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ளலூர் ராஜவாய்க்காலில் மூன்றுவார கால தூய்மை பணி வீணா ? கோவை மாவட்ட நிர்வாகம் மெத்தனம்

கோவை நொய்யல் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளன. ஆறு, குளங்கள், பாசன வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரிடையாக பாசன வசதி பெறுகிறது.

1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் பாயும். அப்போது குளங்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ளலூர் குளத்திற்கு பாயும் 8 கி.மீ நீளம் கொண்ட ராஜ வாய்க்கால், குனியமுத்தூர் குளத்திற்கான ராஜ வாய்க்கால், பேரூர் ராஜ வாய்க்கால் போன்றவை பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதில் ஆக்கிரமிப்பில் இருந்த நொய்யல் ராஜ வாய்க்கால்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



வெள்ளலூர் ராஜ வாய்க்கால் அடைப்பினாலும், ஆக்கிரமிப்பினாலும் போதுமான அளவு நீர் பாயவில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இந்த குளம் 45 சதவிகிதம் மட்டுமே நிரம்பியது. கடந்த 2009-ம் ஆண்டில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து குளங்களும் நிரம்பின. ஆனால் வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாயவில்லை. 

இந்த குளத்திற்கு சுண்ணாம்பு கால்வாயிலிருந்து செல்லும் வாய்க்கால் மூலமாக நீர் செல்லவேண்டியிருக்கிறது. ராஜ வாய்க்கால் கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது. 



கேவையில் பல்வேறு குளங்களை சிரமைத்து வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும் கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள், மண் திட்டுக்கள், பிளாஸ்டிக் மற்றும் புதர்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவமழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்கால் பகுதியினை சுத்தம் செய்வதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.



குறிப்பாக, இந்த வாய்க்கால் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 1800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதனை அகற்றி மாற்று இடத்தில் அப்பகுதி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாற்று இடத்தில் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது வரை ராஜவாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றினால் மட்டுமே தற்போதைய பருவமழையில் மழை நீர் சேகரமாகும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...