ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு தகவல்சொல்லும் கோவை வனக் கல்லூரியின் சுற்றுச்சுவர்

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் அமைந்துள்ளது வனக்கல்லூரி. அன்றாடம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலையில் வனக்கல்லூரியின் சுற்றுச்சுவர் அசுத்தம் நிறைந்ததாகக் காணப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) ரோட்டரி கிளப் மாணவர்கள் இணைந்து ஜிசிடி கல்லூரி முதல் வனக்கல்லூரி வரையிலான சுற்றுச்சுவற்றில் சமூக விழிப்புணர்வுமிக்க ஓவியங்களை வரைய முன்வந்தனர்.



அதன்படி, இத்திட்டத்திற்கு ரவுண்டு டேபில் 31 அமைப்பின் நிதி உதவியுடன் இக்கல்லூரியின் சுற்றுச்சுவற்றில் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயினை எட்டியுள்ளது.



இதுகுறித்து ஜிசிடி கல்லூரி மாணவரும், அக்கல்லூரி ரோட்டரி கிளப் தலைவருமாகிய அனக்ஸ் கூறுகையில், பெரும்பாலான மக்கள் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையினை பயன்படுத்த மறுத்து வருகின்றனர். காரணம், அவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதே ஆகும். அதுபோன்றுள்ள ஜிசிடி முதல் வனக்கல்லூரி வரையிலான நடைபாதை அருகே உள்ள சுற்றுசுவற்றில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டோம்.



இதில், நமது கலாச்சாரம், கலை, பெண்கள் முன்னேற்றம், வனவிலங்குகள், இரத்த தானம், மாசுபாடுகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



இதனைக்காணும் போது, அவ்வழியாக செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைவர். நடைபாதையும் சுகாதாரமாக இருக்கும். இதற்கான அனைத்து உதவிகளையும் ரவுண்டு டேபில் 31 அமைப்பு வழங்கி வருகிறது.



பொதுமக்களும், இந்த சுவற்றில் ஓவியங்கள் வரைய விரும்பினால் அதற்கான உபகரணங்கள் அனைத்தும் நாங்கள் வழங்குகிறோம். உங்களது ஓவியங்களை வரைந்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள முன் வாருங்கள்' என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...