ஈஷா-வுடன் இணைந்து 50 கோடி மரம் நடும் மகாராஸ்டிர வனத்துறை

மகாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் ஈஷா அறக்கட்டளை கடந்த ஜூலை 1ம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மகாராஷ்டிரா நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பலர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டது.



2017இல்  தொடங்கி அடுத்த 3 வருடங்களுக்குள் மகாராஷ்டிரத்தில் 50 கோடி மரங்கள் நட்டு மகாராஷ்டிரத்தின் பசுமை போர்வையை கணிசமாக அதிகரிக்கும் பொருட்டு இவொப்பந்தம் கையழுத்திடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பசுமைப்போர்வை அதிகரிப்பு திட்டத்தின் கீழ் குறிப்பாக கோதாவரி நதி வெள்ளப்பெருக்கு பகுதியில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் மரங்கள் நடப்படவுள்ளது.



தென்னிந்தியாவில் பசுமைப்போர்வையை அதிகரித்ததில் வெற்றிகரமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஈஷா அறக்கட்டளை இத்திட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக இருக்கும். மகாராஷ்டிரா அரசு, ஈஷா அறக்கட்டளையின் ஆலோசனை மற்றும் உள்ளீடு மூலம் 3 வருடங்களில் 50 கோடிமரங்களை (2017இல் 4 கோடி மரங்கள், 2018இல் 13 கோடி மரங்கள் மற்றும் 2019இல் 33 கோடி மரங்கள் என்ற விகிதத்தில்) நட்டு வளர்க்க உள்ளது. மகாராஷ்டிரா வனத்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் திட்டத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் துணையோடு இத்திட்டத்திணை வழிநடத்தும்.

மேலும் ஈஷா அறக்கட்டளை மத்திய பிரதேசத்தில் "நர்மதா நதி புத்துயிரூட்டல்" திட்டத்தின் கீழ் "நமாமி நர்மதே" மற்றும் "நர்மதா சேவா யாத்ரா" போன்றவற்றில் மத்திய பிரதேச அரசுடன் பணியாற்றி வருகிறது.



மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த மாநாடு விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் "இம்முயற்சியில் மகாராஷ்டிரம் முன்னோடியாக திகழும் "என்றும், "நதிகளை நாம் காக்கவில்லை என்றால் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது", என்றும் கூறினார்.



சத்குரு கூறுகையில், நாம் நமது நீர் மற்றும் நிலத்தின் நிலை குறித்து போதிய கவனம் கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த வளங்கள் குறைந்த கொண்டு இருக்கின்றன. நாம் சேதம் ஏற்படுத்தியுள்ளோம் என்றால் நம்மால் அதை சரி செய்யவும் முடியு ம்என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் மாற்றம் உருவாக்கம் பொருளாதாரத்திட்டம் வேண்டும். நாம் சரியான வகை மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் நம் விவசாயிகளின் வருமானத்தை 5 வருடங்களில் 300- 800 சதவிகிதம் அதிகரிக்க முடியும்" என்றார்.

ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் தமிழகத்தில் 30 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடன் 3 கோடிக்கும் மேல் மரம் நட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...