கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 91.61 சென்ட் நிலம் மீட்பு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 91.61 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி கிராமம், வார்டு எண்.28, எம்.வி சாமி நகர் பகுதியில் அமைந்துள்ள, 10 சென்ட் பரப்பளவும், 80 லட்சம் மதிப்பும் கொண்ட பொது ஒதுக்கீடு இடத்தில், இளங்கோ என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த ஷெட் அகற்றி மாநகராட்சி இடம் கையகப்படுத்தப்பட்டது.

மேலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி கிராமம், வார்டு எண்.36, வி.ஆர். கார்டன் பகுதியில் உள்ள 34 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, மகாராணி அவன்யூ -1 எக்ஸ்டென்சன் பகுதியில் உள்ள 33.16 சென்ட் பரப்பு மற்றும் வார்டு எண்.19 சிவகாமி நகர் பகுதியில் உள்ள 9.45 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி கிராமம், வார்டு எண்.100, ஹவுசிங் யூனிட்டில் 5 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 91.61 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.25 பூமார்க்கெட் பகுதியல் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேறக்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...